வெள்ளி, 11 மார்ச், 2011

தி.மு.க., கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் விலகல்

சென்னை: புரட்சி பாரதம் கட்சி, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி விட்டதாகவும்,தேர்தலில் 63 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர்கள் காமராஜ், சிவஞானம், மாநில செயலர் வின்சென்ட் ஆகி÷ யார் சென்னையில், நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:கடந்த 2004ம் ஆண்டு பார்லி., தேர்தலில் தி.மு.க.,வுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார். ஏழு ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்தோம். எந்த பிரச்னையும் ஏற்படாமல் நடந்து கொண்டோம்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

துணை போயிர்ருக்கும் பிரதமரை என்னதான் சொல்வது

புரட்சித்தலைவி அம்மா  சொல்வது 100 சதவீதம் சரி. ச்பெக்ட்ரும் ஊழல் வெளியில் தெரிவதற்க்கு இவர்தான் ஒரு முக்கிய காரணம். தமிழ் நாட்டில் , கருணாநிதியை எதிர்த்து தைரியமாக சவால் விடும் அளவுக்கு வேறு யார் உள்ளார்கள். இல்லையென்றால் இந்நேரம் தமிழ் நாடே காணாமல் போயிருக்கும். அம்மா -வின் டைம்ஸ் நௌ பேட்டி தான் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது. ஆனால் இதுபற்றி தெரிந்தும் அதை கூட்டணி தர்மம் என்று காரணம் சொல்லி ஊழலை மூட துணை போயிர்ருக்கும் பிரதமரை என்னதான் சொல்வது 
முதல் வெற்றி :ஆ .ராசா கைது .
இரண்டாம் வெற்றி ;பாராளுமன்ற கூட்டுக்குழுக்கு மத்திய அரசு பணிந்தது. 

திங்கள், 21 பிப்ரவரி, 2011

கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்...

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் (கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். இது அனைத்தும் உங்கள் பணம். உங்கள் சொத்து

ராஜா : அண்ணே என்ன திடிரென்று பார்க்க வந்துர்கீங்க,

ராஜா : அண்ணே என்ன திடிரென்று பார்க்க வந்துர்கீங்க,

பாலு: கூடிய சீக்கிரம்  நாங்களும் இங்கே வரணுமே ..அதுக்கு தான் இடம் வசதியா இருக்கா பார்க்க வந்தேன் தம்பி..

ராஜா: கவலை படாதீங்க அண்ணே!,நீங்க,தலைவர்,தலைவர் பொண்டாடிங்க,பொண்ணு,புள்ளைங்க....யாரு வந்தாலும் தங்குவதற்கு ரொம்ப வசதியா இருக்கு...சீக்கிரம் வாங்க இங்க கூட சிறை துறையில் சீர்திருத்தம் பண்ண வேண்டியது நிறைய  இருக்கு.. இதுலையும் பெருசா பார்க்கலாம் .....சீக்கிரம்..சீக்கிரம்


                                                                                  



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய ரூ.206 கோடிக்கான பணப் பரிமாற்றம்

         2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய ரூ.206 கோடிக்கான பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பின்பே கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.




இது குறித்து அவர் வெளியிட்ட  அறிக்கையில், "2ஜி அலைக்கற்றை தொடர்புடைய தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த பால்வா, கலைஞர் டி.வி.யிடம் ரூ.206 கோடியை கொடுத்திருப்பதாகப் புலனாய்த்துறை நீதிமன்றத்தில் வெளியிட்டது. இதன்மூலம் புலனாய்வுத்துறை பெரிய தவறைச் செய்துள்ளது.

இது போன்ற சந்தேகத்தை வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். பொதுவான நடைமுறையைப் பின்பற்றியதன் மூலம், கலைஞர் டி.வி. நிர்வாகத்துக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத்துறை வழிவகுத்துவிட்டது.

அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்நிலைக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமைச் செயல் அலுவலர் சரத்குமார், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், மூத்த வழக்கறிஞர்கள், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 11 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் காலை 4 மணிக்குத்தான் முடிந்ததாம்.

பிப்ரவரி 13-ம் தேதி கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 15-ம் தேதி கலைஞர் டி.வி. தொடர்புடைய ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு, சிறு துண்டுகளாகக் கிழிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நம்பகமான ஆதரங்கள் அனைத்தையும் அழித்த பிறகு குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, "ரூ. 206 கோடி பணப் பரிமாற்றத்திற்கும், 2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது' என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார்.

இது மட்டுமல்லாமல், "மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அழைப்பை ஏற்றுதான் மத்திய புலனாய்வுத்துறை கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சோதனை நடத்தியதைப் போல் தெரிகிறது. 

மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளைத் தோண்டி ஆராய்ந்து பார்த்தால், அலைக்கற்றை ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்த முடியும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

புரட்சித்தலைவி அம்மாவின் 63 வது பிறந்தநாள் விழா


புரட்சித்தலைவி அம்மாவின்
63 வது பிறந்தநாள் விழாவை 
முன்னிட்டு 
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்தல்,
அன்னதானம் 
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தலைமை : திரு.வா. மைத்ரேயன் 
மாவட்ட பொறுப்பாளர் 

முன்னிலை : திரு.வி.சோமசுந்தரம்  
மாவட்ட கழக செயலாளர் 

வரவேற்ப்புரை :
மு.காமராஜ் மா.க.அ.த
N .S .A .இரா.மணிமாறன் மா.அ.பே.செ
கே.பழனி கு.ஒ.க.செ 

நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர் 
திரு.ஒ.பன்னீர்செல்வம் M .L .A
கழக பொருளாளர் 

திரு.K.A .செங்கோட்டையன் M .L .A  
தலைமை நிலைய செயலாளர் 

திருமதி.பா.வளர்மதி 
கழக அமைப்பு செயலாளர் 

திருத்தணி.கோ.அரி M .L .A  
மா.எம்.ஜி.ஆர் ம.செ   

மைக்.முனுசாமி.
மா.அ.தொ.த

விழாவின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு .... இங்கே கிளிக் செய்யவும்
 
 






வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஆ.ராசா - தில்லி திகார் 14 நாட்கள் சிறை

        புதுதில்லி, பிப்.17:  முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14   நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன் பிறகு ராசாவுக்கு மட்டும் கடந்த 8-ம் தேதியும், 10-ம் தேதியும், பின்னர் 14-ம் தேதியும் சிபிஐ காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டத
சிபிஐ காவல் முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராசாவை மேலும் காவலில் எடுக்க சிபிஐ அனுமதி கோராததால் அவரை மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

திகார் சிறையில் ராசாவுக்கு புத்தகங்களும், மருந்துப் பொருட்களும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். மேலும் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவை அவருக்கு அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

புதன், 16 பிப்ரவரி, 2011

டாடா கடித விவகாரம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி

சென்னை, பிப்.16- முதல்வர் கருணாநிதிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய கடிதம் தொடர்பாக விளக்கம் கேட்டு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் தரகர் நீரா ராடியா மூலம் நேரடியாக கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டதாக  கூறப்படும் ரத்தன் டாடாவின் கடிதத்தினை அவசர, அவசரமாக கருணாநிதி மறுத்திருப்பது மேலும் பல புதிய வினாக்களை, சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  இந்தக் கடிதம் ஒரு பிரபலமான தேசிய நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட போதும், அந்தக் கடிதம்  தொலைக்காட்சி சானல்களில் காண்பிக்கப்பட்ட போதும், எந்தவிதமான மறுப்பையும் கருணாநிதி தெரிவிக்கவில்லை.

 இது குறித்த பொருத்தமான, அர்த்தமுள்ள கேள்விகளை நான் எழுப்பிய பிறகு தான் அதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.  இந்தக் கடிதம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்ட போது அதற்கு கருணாநிதி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? இந்தக் கடிதத்தை எழுதிய ரத்தன் டாடா மற்றும் இந்தக் கடிதத்தை கருணாநிதியிடம் நேரடியாக கொடுத்ததாக கூறப்படும் நீரா ராடியா ஆகியோர் ஏன் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை?

இது மின்னணு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டக் கடிதம் அல்ல. டாடாவின் பம்பாய் அலுவலக லெட்டர் பேடில் ரத்தன் டாடாவால் கைப்பட எழுதப்பட்ட கடிதம். டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் நாராயண் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ரத்தன் டாடா கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தினை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததோடு, “அப்போதைய மத்திய அமைச்சர் ராசாவின் கொள்கை அறிவிப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தொழிற்துறையில் உள்ள சுயநலவாதக் குழுக்களால் பொது விவாதம் எழுப்பப்பட்ட தருணத்தில் எழுதப்பட்ட கடிதம் இது” என்று தெரிவித்து, அந்தக் கடிதத்தில் உள்ள கருத்தினை நியாயப்படுத்தி இருக்கிறார்

.  நீரா ராடியா இது போன்ற கடிதத்தினை தன்னிடம் அளிக்கவில்லை என்று கருணாநிதி தற்போது தெரிவித்து இருக்கிறார். டாடாவிடம் இருந்து இதுபோன்ற கடிதத்தினை தான் பெற்றதே இல்லை என்றும் கூறியிருக்கிறார் கருணாநிதி. எனவே, இந்தக் கடிதத்தினை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஊடகங்கள் மீது கருணாநிதி வழக்கு தொடரப் போகிறாரா? டாடா குழுமத்தின் மூத்த அதிகாரியான ராஜீவ் நாராயண் பொய் சொல்லியிருக்கிறார் என்று கருணாநிதி பகிரங்கமாக அறிவிப்பாரா?

மத்திய புலனாய்வுத் துறையின் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த புலன் விசாரணையில் கூர்ந்து விசாரிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் இந்தக் கடிதமும் ஒரு முக்கிய ஆவணம் என்று 13.11.2007 தேதியில் எழுதப்பட்ட கடிதத்தை முதலில் வெளியிட்ட நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த கடிதத்தில் உள்ள கருத்துகளிலிருந்தும், டாடா குழும மூத்த அதிகாரியின் அறிக்கையிலிருந்தும் கருணாநிதியின் கூற்று மாறுபட்டு இருப்பதால், இந்தக் கடிதத்தில் மேலோட்டமாகத் தெரிவதைக் காட்டிலும், வெளிவர வேண்டிய தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்பது மத்திய புலனாய்வுத் துறைக்கு தெளிவாக தெரிந்திருக்கும்.

 மேலும், ரதன் டாடாவின் கடிதம் கற்பனையானது, கட்டுக்கதை என்று கருணாநிதி வருணித்துள்ளதில் இருந்து, கருணாநிதியால் மறுக்கப்படாத, கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்த மற்ற தகவல்கள் அனைத்தும் மறுக்க முடியாத உண்மை என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நில விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவுடன் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்தி தொலைபேசியில் உரையாடியது; நீரா ராடியா மற்றும் கனிமொழி உரையாடல்களில், கருணாநிதியின் இளைய மகள் கனிமொழி, தயாநிதி மாறனை ஒதுக்கிவிட்டு, ஆ. ராசாவுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப வாதிட்டது; நீரா ராடியா மற்றும் வீர் சங்வி உடனான உரையாடலில், தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை உறுதி செய்யும் பொருட்டு, தயாநிதி மாறன் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளுவுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதாக நீரா ராடியா தெரிவித்தது ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதிலும் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்பும், கருணாநிதியால் மறுக்கப்படவில்லை. அதாவது கருணாநிதியால் மறுக்கப்படாத அனைத்தும் மறுக்க முடியாத உண்மைகள

இதிலிருந்து, எந்த மாதிரியான மனிதர் முதல்வராக தமிழ்நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார் என்பதையும், நாட்டை சுரண்டுவதற்காக எம்மாதிரியான நெறிமுறைகளை கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதையும், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை தமிழக மக்களிடத்தில்தான் தற்போது உள்ளது. வருகின்ற சட்டடன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இதுபோன்ற சுயநலவாத, சந்தர்ப்பவாத கும்பல் இந்த நாட்டை மீண்டும் ஆட்சி புரிய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் தமிழக மக்களிடத்தில் தான் இருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சனி, 12 பிப்ரவரி, 2011

2ஜி முறைகேடு: ராசா-பால்வா தொடர்பு உறுதி?


2ஜி முறைகேடு: ராசா-பால்வா தொடர்பு உறுதி?
புதுடெல்லி, பிப்.12,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் தனக்கு தொடர்பு இருந்ததை, டிபி ரியாலிட்டி குழுமத்தின் தலைவர் பால்வா ஏற்கெனவே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிஐக்கு பால்வா அனுப்பிய 2010 டிசம்பர் 22 தேதியிட்ட கடிதத்தில் இதுகுறித்த விவரம் இடம்பெற்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கடிதத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தில் சாதிக் பாட்சாவை சந்தித்ததாக பால்வா குறிப்பிட்டுள்ளார். '
அந்தக் காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் அமைச்சராக ராசா பொறுப்பு வகிந்திருந்தது இங்கே கவனத்துக்குரியது.
ராசாவுக்கு மிக நெருக்கமான உதவியாளரான சாதிக் பாட்சா, தென் இந்தியாவில் பால்வாவின் டிபி ரியாலிட்டி குழுமம் ரியல் எஸ்டேட் துறையில் தடம்பதிக்க உறுதுணையாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆ.ராசாவையும், பால்வாவையும் கைது செய்து கஸ்டடியில் சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஸ்பெக்ட்ரம் விசாரணை: முக்கிய குறிப்புகள்

ஸ்பெக்ட்ரம் விசாரணை: முக்கிய குறிப்புகள்
16 மே, 2007: ஆ.ராசா தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

25 அக்டோபர், 2007: செல்போன் சேவைக்கான 2 ஜி (இரண்டாம் தலைமுறை) ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான ஏலத்தை நடத்த அரசு சட்டம்.

செப்டம்பர்-அக்டோபர், 2008: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது.

15 நவம்பர், 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதிக்கீடட்டில் ஊழல் இருப்பதாக கருதி தொலைத் தொடர்பு அமைச்சகம் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதல் விசாரணை.

21 அக்டோபர், 2009: 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பதிவு செய்தது.

22 அக்டோபர், 2009: தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை.

17 அக்டோபர், 2010: ஸ்பெக்ட்ரம் ஓதிக்கிட்டில் ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதாக தணிக்கை குழு ஆடிட்டர் ஜெனரல் தொலைத் தொடர்பு அமைச்சகம் மீது புகார்.

நவம்பர், 2010: ஆ.ராசாவை பதவி விலக்கமாறு எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்.

14 நவம்பர், 2010: ஆ.ராசா ராஜினாமா.

15 நவம்பர், 2010: மனித வள மேம்பாட்ட அமைச்சர் கபில் சிபலுக்கு தொலைத் தொடர்புத்துறை கூடுதலாக வழங்கப்பட்டது.

நவம்பர், 2010: நாடாளுமன்றம் கூட்டுக்குழு குழு விசாரணை கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முழுவதும் முடக்கியது.

13 டிசம்பர், 2010: ஸ்பெக்ட்ரம் முறை கேட்டை கண்டுபிடித்து ஆவணங்களை சமர்பிக்க முன்னால் நீதிபதி சிவ்ராஜ் பாட்டீல் நியமனம்.

24,25 டிசம்பர், 2010: ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை.

31 ஜனவரி, 2011: மூன்றாவது முறையாக ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை சிவ்ராஜ் பாட்டீல் தனது அறிக்கை சமர்பித்தார்.

2 பிப்ரவரி, 2011: ஆ.ராசா தொலைத் தொடர்பு செயலாளர்கள் சித்தார்த்தா பெகுரியா, ஆர்.கே. சந்தோலி ஆகியோர் கைது 

செவ்வாய், 25 ஜனவரி, 2011

குடியரசு தின உறுதி மொழி

இந்திய திருநாட்டில் வறுமை ஒழிந்து -வன்முறைகள் தீவிரவாத பயங்கரவாத சக்திகள் அழிந்து  நம் தாய்நாட்டை ஊழல் என்னும் பேரில் நாட்டை சுரண்டி சூறையாடிக்கொந்டிருக்கும் கொடிய தீய சக்திகளை அடையாளம் கண்டு
ஒழிப்போம் என்றும் ,  மகாத்மாவின் அறவழியில் தாய்நாட்டை ஒற்றுமையுடன் காப்போம் என இந்த குடியரசு தின திருநாளில் உறுதி ஏற்ப்போம்     
                                        
வந்தே மாதரம் !    

திங்கள், 24 ஜனவரி, 2011

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்  2 ஜி ஸ்பெக்ட்ரம்  அலைக்கற்றை ஒதுக்கிடு முறைகேட்டில் நடந்த 1760000 கோடி ஊழலில்

திருட்டு ராசாவை கைது செய்யகோறியும்  மக்களின் அடிப்படை வசதிகளை செய்யத்தவறிய தமிழகத்தின் தீய சக்தி
கருணாநிதி களவாணி போக்கை கண்டித்தும் காஞ்சி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை பூந்தமல்லில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  டாக்டர் வ.மைத்திறேயன் தலைமைல் திருமிகு வி.சோமசுந்தரம் முன்னிலையில் நடைப்பெற்றது கழக உடன்பிறப்புக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்